வான மழை நீ எனக்கு

வேண்டும் போதும்..
வேண்டி கேட்ட போதும்..
இல்லையென்று சொல் உணராது..
தந்துதவும்.. உன்னை
வேறென்ன சொல்ல..!

கைமாறு கருதாமல்..
கை நீட்டி.. அரவணைக்கிறாய்..
மண்ணுலகில்..மானுடர்க்கு
மட்டுமல்லாமல்..
புல்..பூண்டுக்கும்
நீயே.. அன்னையாய்..
அன்பு பொழிகிறாய்..

வான மழையே நீ யெனக்கு
தவிமின்றி கிடைத்த
வரமின்றி வேறென்ன..!

தினமணி இணையத்தில்:
http://goo.gl/CnLrne





0 Comments: